Thursday, October 21, 2010

நபி வழியில் நம்பெருநாள் முஸ்லிம்கள்;; தமக்கு மத்தியில் சந்தோசங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்துக்கள் கூறி சகோதரத்துவமாக இரு

முஸ்லிம்கள்;; தமக்கு மத்தியில் சந்தோசங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்துக்கள் கூறி சகோதரத்துவமாக இரு பெரு நாட்களையும் கொண்டாடுவதற்கு ஆண்கள், பெண்கள், பெரியோர், சிரியோர்;, இளைஞர், யுவதி என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஒரு திடலுக்கு வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அங்கு தொழுகை நடாத்துவார்கள்;.
நபி (ஸல்) அவர்களின் வபாதிற்கு பின்னால் ஸஹாபாக்களும் இவ்வழிமுறையையே கடைப்பிடித்தனர். எனவே வாழ்வின் வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்களை எடுத்துக்கொள்வது முஸ்லிம்களின் கடமை என்பதனால் நாமும் அவர்கள் காட்டித்தந்த வழியில் பெருநாளைக் கொண்டாடுவோம்.
பெருநாள் தொழுகையை நிறை வேற்றுவதற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள்:
 இரு பெருநாள் தொழுகைகளும் திடலில் நிறைவேற்றப்பட வேண்டும், தொழும் இடத்துக்கு முன்னால் ஸ_த்ரா (தடுப்பும்) வைக்கப்பட வேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள், அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும், அதை நோக்கி நபி(ஸல்)அவர்கள் தொழுவார்கள்."" அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 930
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை திடலிலேயே தொழுது வந்துள்ளார்கள் ஒரு தடவையேனும் பள்ளியில் தொழுதார்கள் என்பதற்கு எந்த நம்பகமான அறிவிப்புக்களும் கிடையாது.
 ஆண்களும் அவர்கள் பின்னால் பெண்களும் நின்று ஓரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும்.
''பெருநாளில்; (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய்ப் பெண்களையும் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்"";.
அறிவிப்பவர் உம்மு அதிய்யா (ரலி) நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 928

 தொழுகை முடிந்ததும் இமாம் மக்கள் முன்னால் எழுந்து நின்று ஒரு போதனை நிகழ்த்த வேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே ஆரம்பிப்பார்கள், தொழுது முடிந்ததும் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள், மக்கள் தங்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள், கட்டளைகள் பனிப்பார்கள்"". அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புஹாரி ஹதீஸ் எண்: 913
 நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பின்னும், ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிடாமலும் திடலுக்கு வரவேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிடாமல் (தொழுகைக்கு) செல்ல மாட்டார்கள், ஹஜ்ஜூப்பெருநாளில் தொழாமல் சாப்பிட மாட்டார்கள்"". அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதீ, ஹதீஸ் எண்: 542

 தொழுகைக்கு ஒரு பாதையால் சென்று மற்றொரு பாதையால் திரும்ப வேண்டும்.

''பெருநாள் தினமாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்"". அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புஹாரி, ஹதீஸ் எண்: 943
 பெரு நாள் தினங்களில் சொல்லப்பட வேண்டிய தக்பீருடைய வார்த்தைகள்.

الله أكبر الله أكبر الله أكبر كبيرا. அல்லாஹ_ அக்பர் அல்லாஹ_ அக்பர் அல்லாஹ_ அக்பர் கபீரா. இவ்வாசகங்கள் சல்மான் (ரலி) ஊடாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நூல்;: பைககீ, ஹதீஸ் எண்: 6506

தக்பீர் விடயமாக வந்த செய்திகளில் மிகச்சரியான அறிவிப்பு இது மாத்திரமே.
இவை தவிர்ந்த மற்றய வார்த்தைகள் அனைத்தும் ஆதாரமற்றவைகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைகளுமாகும்.
சொந்த இலாபங்களுக்காக அல்லாஹ்வின் மார்கத்தில் மௌலவி மார்கள் நுளைத்து விட்ட
நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டலில் இல்லாத சில விடயங்களை இனங்கண்டு அவற்றைக் கை விடுவோம்!
 பெருநாள் தொழுகையின் முதல் ரக்காத்தில் சொல்லப்படுகின்ற 7 தக்பீர்களிலும், இரண்டாம் ரக்காத்தில் சொல்லப்படுகின்ற 5 தக்பீர்களிலும் இரு கைகளையும் உயர்த்திக்கட்டுவது நபி (ஸல்) அவகளின் வழிகாட்டலில் இல்லாத விடப்பட வேண்டிய ஒரு செயல்.
 மிம்பர் மேல் ஏறுதல், அசா (கைதடி) பிடித்தல், இரண்டு குத்பாக்கள் செய்தல், இரண்டுக்கும் இடையில் அமர்தல் போன்ற செயல்களை பெருநாள் குத்பாக்களில் செய்வது நபி (ஸல்) அவர்களின்; வழிமுறைக்கு முறனானது.

மிம்பர் மேல் ஏறுதல், இரண்டு குத்பாக்கள் செய்தல், இரண்டுக்கும் இடையில் அமர்தல் போன்ற செயல்களை நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உடைய குத்பாவில் மாத்திரமே செய்தார்கள்.

 தொழுகை முடிந்த பின் கூட்டாகப் பிராரத்தனை செய்தல்.

''இக்கூட்டுப்பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு தொழுகையின் பின்னாலும் செய்யவில்லை.
பள்ளிவாயல்களில் கடமை புரிந்து வரும் பள்ளி இமாம்களால் அரங்கேற்றப்பட்டு வரும் இந்நடைமுறை
மார்க்கத்திற்கு முறனானதும், ஹவ்லுல் கவ்தர் எனும் சுவர்க்கத்தின் நீர் தடாகத்தில் இருந்து நபி (ஸல்) அவரகளின் கைகளால் நீர் பருகும் பாக்கியத்தை தடுத்து விடுவதுடன் கொடிய நரகில் கொண்டு சேர்த்துவிடக்கூடிய பித்அத்தான செயலாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்;"". நூல்: புஹாரி, ஹதீஸ்: 6211, ஸ_னன் நஸாயீ ஹதீஸ்: 1786
நபியின் வழிகாட்டலில் இல்லாத அமல்களை யார் செய்தாலும் அது புறக்கணிக்கப்படவேண்டும் . நூல்: ஸஹீஹ், முஸ்லிம்
நபியின் வழிகாட்டலில் இல்லாத அமல்கள் பித்அத்கள், பித்அத்கள் அனைத்தும் நரகிற்கே சேர்க்கும்.
நூல்: ஸ_னன் நசாயீ : 1786

மார்க்கத்திற்கு முறனான வழிகளில் மக்களை வழிநடத்தும் வழிகாட்டிகளும், அவ்வழிகாட்டிகளைப் பின் தொடரும் மக்களும் இவ்விடயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்,;
''ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவர் வழிகாட்டிகளுடன் நாம் அழைக்கும் நாளில் தமது பதிவேடு வலக்கையில் கொடுக்கப்படுவோர் தம் ஏடுகளை படிப்பார்கள்;, அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். இம்மையில் (நேர்வழிபெறாமல்) குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவும், வழி கெட்டவராகவும்; இருப்பார்;"".
அல் குர்ஆன் 17:71-72
பெருநாளையும் ஏனைய அமல்களையும் நபி வழியில் செய்து ஈருலகிலும் வெற்றியடைந்த கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.

No comments:

Post a Comment